ஜப்பானிய நிறுவனம் இலங்கையில் முதலீடு

ஜப்பானிய நிறுவனம் இலங்கையில் முதலீடு

by Staff Writer 11-09-2019 | 8:38 AM
Colombo (News 1st) ஜப்பானைச் சேர்ந்த நிறுவனமொன்று இலங்கையில் முதலீட்டை மேற்கொள்வதற்கான திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. இதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது. தேயிலை ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்தும் தேயிலை எற்றுமதிக்கான பொதியிடும் பொருட்கள் உள்ளிட்டவற்றை இந்த நிறுவனம் தயாரிக்கவுள்ளது. குறித்த நிறுவனம் பொருட்களை பொதியிட பயன்படுத்தப்படும் இயந்திரங்களை இறக்குமதி செய்து இந்தப் பொருட்களை தயாரிக்கவுள்ளது. இதற்காக இந்த நிறுவனம் 7.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளது.