Enterprise Sri Lanka கண்காட்சியின் இறுதி நாள்

Enterprise Sri Lanka 2019 கண்காட்சியின் இறுதி நாள் இன்று

by Staff Writer 10-09-2019 | 10:35 PM
Colombo (News 1st) தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் ''Enterprise Sri Lanka 2019'' கண்காட்சியின் இறுதி நாள் இன்றாகும். இக்கண்காட்சி யாழ்ப்பாணம் - முற்றவௌி அரங்கில் கடந்த சனிக்கிழமை (07) ஆரம்பமானது. தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த கண்காட்சியின் இறுதி நாள் இன்றாகும். இலங்கையின் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்தல் மற்றும் அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளை மக்களுக்கு நெருக்கமாக்குதல் எனும் நோக்கில் Enterprise Sri Lanka கண்காட்சியின் மூன்றாம் கட்டம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. கண்காட்சியின் இறுதி நாளான இன்றைய தினம், காலை முதல் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பெருமளவிலானோர் கண்காட்சியை பார்வையிட வருகை தந்திருந்தனர்.