பேசாலை மீனவர்கள் நால்வர் கைது

பேசாலை மீனவர்கள் நால்வர் கைது

by Staff Writer 10-09-2019 | 4:41 PM
Colombo (News 1st) மன்னார் - பேசாலை கடற்பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட உள்ளூர் மீனவர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களின் இரண்டு டிங்கி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரிய பண்டார தெரிவித்தார். கடற்றொழிலுக்கு பயன்படுத்தப்பட்ட வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மன்னார் - பேசாலை பகுதியை சேர்ந்த 20, 22, 26 மற்றும் 34 வயதான நான்கு பேரே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட உள்ளூர் மீனவர்களை மன்னார் கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படை பேச்சாளர் லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரிய பண்டார தெரிவித்தார்.