by Staff Writer 10-09-2019 | 4:33 PM
Colombo (News 1st) கோதுமை மாவிற்கான உத்தரவாத விலை இந்த வாரத்தில் தீர்மானிக்கப்படும் என அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.
கோதுமை மாவின் விலையை அதிகரிக்க வேண்டுமாயின், வாழ்க்கைச் செலவு தொடர்பான குழுவின் பரிந்துரையும் அமைச்சரவையின் அங்கீகாரமும் அவசியமாகும்.
இதேவேளை, கோதுமை மாவின் விலையை கூடுதலாக விற்பனை செய்த நூற்றுக்கும் அதிகமான சில்லறை வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.