எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது

எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது

by Staff Writer 10-09-2019 | 8:06 PM
Colombo (News 1st) எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய ஒக்டேன் 92, 95 மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலை 2 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. எனினும், ஒட்டோ டீசலின் விலையில் மாற்றம் இல்லையென நிதியமைச்சு அறிவித்துள்ளது. ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 138 ரூபாவில் இருந்து 136 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலை 163 ரூபாவில் இருந்து 161 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன், சுப்பர் டீசலின் விலை 134 ரூபாவில் இருந்து 132 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் இந்த விலைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.