குடு ரொஷான் உள்ளிட்ட எழுவருக்கு விளக்கமறியல்

ஆனமாலு ரங்கா உள்ளிட்ட இருவர் கொலை: குடு ரொஷான் உள்ளிட்ட எழுவருக்கு விளக்கமறியல்

by Staff Writer 10-09-2019 | 3:59 PM
Colombo (News 1st) குடு ரொஷான் உள்ளிட்ட 7 சந்தேகநபர்களும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு - மாதம்பிட்டி பொது மயானத்திற்கு அருகில் கூரான ஆயுதத்தால் குத்தி ஆனமாலு ரங்கா உள்ளிட்ட இருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறும் இதன்போது கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனா த சில்வா உத்தரவிட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்