சில இடங்களில் நாளை 18 மணிநேர நீர்வெட்டு

நாளை 18 மணிநேர நீர்வெட்டு

by Fazlullah Mubarak 09-09-2019 | 12:37 PM

Colombo (News 1st) கம்பஹா மற்றும் களனி ஆகிய பகுதிகளில் நாளை (10) காலை 9 மணி தொடக்கம் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

களனி ஆற்றின் தெற்குக் கரையில் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் புதிய குழாய் கட்டமைப்பு இணைக்கப்படுவதால் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய வத்தளை, மாபோல, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ, மஹர, கம்பஹா ஆகிய பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.