by Fazlullah Mubarak 09-09-2019 | 10:14 AM
Colombo (News 1st) நபரொருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் அநுராதபுரம் - திரப்பனை பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எக்சத் லங்கா மகா சபா கட்சியை சேர்ந்த திலக் ராஜகருணா எனும் பிரதேச சபை உறுப்பினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதேச சபை உறுப்பினரின் தாக்குதலுக்கு இலக்கானவர், அநுராதபுரம் போதனா வைத்தியாசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
கைது செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் கெக்கிராவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.