by Fazlullah Mubarak 09-09-2019 | 12:36 PM
Colombo (News 1st) இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 18 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பிரதான அரசியல் கட்சிகளை சேர்ந்த 17 பேரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சுயாதீனமாகவும் போட்டியிடவுள்ளமை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் ஆணையாளர்களுக்கும் இடையில் இன்று (09) பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
எல்பிட்டி பிரதேச சபை தேர்தல் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் இன்றைய பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்காக, நியமிக்கப்படும் நபரின் பெயர் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்காக, மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியினால் வேட்பாளரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.