நாட்டின் சில பகுதிகளில் கடும் மழை

நாட்டின் சில பகுதிகளில் கடும் மழை

by Staff Writer 08-09-2019 | 1:30 PM
Colombo (News 1st) நாட்டின் சில பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வட மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் பிற்பகல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனால் மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே, ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பிராந்தியங்களிலும் புத்தளம் முதல் காங்கேசன்துறை மற்றும் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கடற்பிராந்தியங்களிலும் காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.