தேர்தலுக்கு பொறுப்பான சிரேஷ்ட பி.பொலிஸ்மா அதிபர்

தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நியமனம்

by Staff Writer 08-09-2019 | 11:15 AM
Colombo (News 1st) தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக ஜகத் அபேசிறி குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஜகத் அபேசிறி குணவர்தன, மேல் மாகாண மற்றும் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பாளராகக் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.