by Chandrasekaram Chandravadani 08-09-2019 | 5:12 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - பூநகரி அரசப்புறக்குளத்தில் நீராடச் சென்று சேற்றில் புதையுண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இராணுவத்தினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி - பூநகரி நான்காம் கட்டை பகுதியைச் சேர்ந்தவர்களே சேற்றில் புதையுண்டுள்ளனர்.
சேற்றில் புதையுண்டு மயக்கமடைந்திருந்த தாய் மற்றும் இரு பிள்ளைகளும் காப்பாற்றப்பட்டு பூநகரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக இராணுவம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.