அனுமதியின்றிய விலை அதிகரிப்பு; வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை

அனுமதியின்றிய விலை அதிகரிப்பு; வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை

அனுமதியின்றிய விலை அதிகரிப்பு; வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

08 Sep, 2019 | 8:08 am

Colombo (News 1st) கோதுமை மாவை அதிக விலையில் விற்பனை செய்த 50 இற்கும் மேற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த வர்த்தகர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் முதல் கோதுமை மாவின் விலையை 5 ரூபாவினால் அதிகரிப்பதற்கு பிறீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்திருந்தன.

எனினும், நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அனுமதியின்றியே விலை அதிகரிக்கப்பட்டது.

அத்தியவசிய பொருளாக கோதுமை மா, பெயரிடப்பட்டதன் பின்னர் தமது அனுமதியின்றி அதன் விலையை அதிகரிக்க முடியாது என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவிக்கின்றது.

இதன் பிரகாரம், தொடர்ந்தும் கோதுமை மா ஒரு கிலோ கிராம் 87 ரூபாவிற்கே விற்பனை செய்யப்பட வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை வலியுறுத்தியுள்ளது.

தமது அனுதியின்றி கோதுமை மாவின் விலையை அதிகரித்த நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, 450 கிராம் நிறையுடைய பாணின் விலை நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் 2 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது.

கோதுமை மாவின் விலை அதிகரித்தமையால் பாணின் விலையை அதிகரிப்பதற்குத் தீர்மானித்ததாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்