மட்டக்களப்பு பாடசாலை மீது அடையாளம் தெரியாதோர் தாக்குதல்: மாணவர்கள் இருவர் காயம்

by Staff Writer 07-09-2019 | 7:13 PM
Colombo (News 1st)  மட்டக்களப்பு - கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட மிறாவோடை தமிழ் அரசினர் கலவன் பாடசாலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். முச்சக்கரவண்டியில் வருகை தந்த அடையாளம் தெரியாத குழுவினர் நேற்று மாலை 7 மணியளவில் பாடசாலை மதிலை உடைத்துவிட்டு சென்றாக பிரதேச மக்கள் தெரிவித்தனர். குறித்த தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் மாலை நேர பிரத்தியேக வகுப்பு நடைபெற்றுக்கொண்டிருந்ததுடன், இரு மாணவர்கள் சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டனர். சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.