by Staff Writer 07-09-2019 | 5:51 PM
Colombo (News 1st) சம்மாந்துறை - காரைதீவு, 10 ஆம் குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.
மின்சாரம் தாக்கிய சிறுமி சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் உயர் தரத்தில் பௌதீக விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்கும் 17 வயதுடைய மாணவியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவியின் சடலம் அம்பாறை பொது வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.