களனி மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் நீர்வெட்டு

களனி மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு

by Staff Writer 07-09-2019 | 3:29 PM
Colombo (News 1st) களனி மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (10) காலை 9 மணி முதல் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. களனி கங்கையின் தெற்கு பகுதில் முன்னெடுக்கப்படவுள்ள நீர் விநியோக கட்டமைப்பின் நிர்மாணப்பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், வத்தளை - மாபொல , கட்டுநாயக்க - சீதுவ நகர சபைக்குட்பட்ட பிரதேசங்களிலும் வத்தளை - மஹர மற்றும் ஜா-எல எல்லைக்குட்பட்ட பிரதேசங்களிலும் கம்பஹா பிரதேச சபை மற்றும் அதன் எல்லைக்குட்பட்ட பிரதேசங்களிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.