ஆளுங்கட்சியில் போதுமானளவு உறுப்பினர்கள் இன்மையால் பாராளுமன்ற சபை நடவடிக்கை ஒத்திவைப்பு

by Staff Writer 06-09-2019 | 8:05 PM
Colombo (News 1st) ஆளுங்கட்சியில் போதுமான அளவு உறுப்பினர்கள் இன்மையால், பாராளுமன்ற சபை நடவடிக்கை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது. முற்பகல் 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட பாராளுமன்ற சபை நடவடிக்கைகளை மாலை வரை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இன்றைய சபை நடவடிக்கையின் ஆரம்பத்தில் ஆளுங்கட்சியின் உறுப்பினர்களால் சில பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அந்த பிரேரணைகளை நிறைவேற்றிக்கொள்ள விவாதம் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரினர்.