by Staff Writer 05-09-2019 | 11:54 AM
Colombo (News 1st) நியூஸிலாந்தில் 1000க்கும் அதிகமானோர் தட்டம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் இன்று (05) வரை 1051 பேர் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய நகரமான ஒக்லண்ட் பகுதியிலேயே அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 877 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதன் காரணமாக தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளாத 12 வயதுக்கும் மேற்பட்டோரை, உடனடியாக தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.