சிதம்பரத்திற்கு பிணை மறுப்பு

சிதம்பரத்தின் பிணையை மறுத்தது உயர் நீதிமன்றம்

by Staff Writer 05-09-2019 | 1:32 PM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் P. சிதம்பரத்திற்கு முன்பிணை வழங்குவதற்கு உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் முன்பிணை வழங்க முடியாது எனவும் பொருளாதாரக் குற்றங்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் எனவும் நீதிபதி பானுமதி தெரிவித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக அமுலாக்கத்துறையின் ஆவணங்களை சீல் வைக்கப்பட்ட உறையில் சமர்ப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது முன்பிணை வழங்கப்படும் பட்சத்தில் தற்போது நடைபெறும் விசாரணை பாதிக்கப்படலாம் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வேண்டும் எனின் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் முன்பிணை கோரி மனு தாக்கல் செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.