by Staff Writer 05-09-2019 | 1:20 PM
Colombo (News 1st) நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயிலொன்று கொழும்பு - கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரை இன்று (05) முதல் சேவையில் ஈடுபடவுள்ளது.
ஸ்ரீதேவி என்ற பெயரிலான நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில் இன்று பிற்பகல் 3.55 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படவுள்ளதாக, ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் நாளாந்தம் பிற்பகல் 3.55 மணிக்கு கோட்டையிலிருந்து குறித்து ரயில் புறப்படவுள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.