கொம்பனித்தெருவில் 44 இந்தியர்கள் கைது

கொம்பனித்தெருவில் 44 இந்தியர்கள் கைது

by Staff Writer 05-09-2019 | 5:10 PM
Colombo (News 1st) குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் விசாரணைப்பிரிவு அதிகாரிகள் கொம்பனித்தெருவில் இன்று (05) அதிகாலை நடத்திய சுற்றிவளைப்பில் சுற்றுலா விசாவில் நாட்டுக்கு வருகைதந்து தொழிலில் ஈடுபட்டிருந்த இந்தியர்கள் 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இந்தியர்களின் விசா காலம் நிறைவடைந்து 2 மாதங்கள் கடந்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசாரணைப்பிரிவு பிரதிக் கட்டுப்பாட்டாளர் எம்.ஜீ.வி. காரியவசம் தெரிவித்துள்ளார். 25 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவர்களே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 18 வௌிநாட்டுக் கடவுச்சீட்டுக்கள் குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன. அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேகநபர்கள் மிரிஹான தடுப்புமுகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசாரணைப்பிரிவு பிரதிக் கட்டுப்பாட்டாளர் எம்.ஜீ.வி. காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.