சு.க.உறுப்பினர்கள் ஐவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

சுதந்திரக் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் ஐவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

by Staff Writer 04-09-2019 | 2:24 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் ஐவருக்கு எதிராக ஒழுக்காற்று செயற்பாடு எடுப்பதற்கான கடிதம் அனுப்பபட்டுள்ளது. இன்று (04) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதற்கான விளக்கங்களும் கோரப்பட்டுள்ளதாக தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.