காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு நிவாரணம்

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கான இடைக்கால நிவாரணத்திற்கு அமைச்சரவை அனுமதி

by Staff Writer 04-09-2019 | 6:01 PM
Colombo (News 1st) காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கான இடைக்கால நிவாரணத்தை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட காணாமற்போனோர் தொடர்பான சான்றிதழ்களைக் கொண்டுள்ளவர்களுக்கு மாதாந்தம் 6,000 ரூபா இடைக்கால நிவாரணம் வழங்கப்படவுள்ளது. அடுத்த மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் ஒவ்வொரு மாதமும் 10 ஆம் நாளன்று இந்த இடைக்கால நிவாரணத்தொகை நேரடியாக வைப்பிலிடப்படவுள்ளதாக நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் இடைக்கால அறிக்கையை கவனத்திற்கொண்டு , பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களுக்காக காணாமற்போனோர் தொடர்பான சான்றிதழை வழங்குமாறு பதிவாளர் திணைக்களத்திற்கு நிதியமைச்சு உத்தரவு பிறப்பிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.