இந்தியாவில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

இந்தியாவில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

by Staff Writer 04-09-2019 | 7:35 AM
Colombo (News 1st) இந்தியாவில் தங்கம் மற்றும் வௌ்ளியின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் ஒரு பவுன் தங்கம் 29,832 இந்திய ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திகள் வௌியிட்டுள்ளன. அத்துடன், வௌ்ளியின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளதுடன் நேற்றைய தினம் ஒருகிலோ வௌ்ளி 52,600 இந்திய ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க - சீன வர்த்தக பதற்றத்தால் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக பொருளியல் நிபுணர்கள தெரிவித்துள்ளனர்.