English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
04 Sep, 2019 | 8:05 pm
Colombo (News 1st) ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டுச்சென்ற தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் ஐந்து பேருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர இன்று தெரிவித்தார்.
தேசியப்பட்டியலில் இருந்து கட்சியை விட்டு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுனவிற்கு சென்றவர்களுக்கு ஒழுக்காற்று விசாரணைகளுக்கான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 7 நாட்களுக்குள் அவர்கள் விடயங்களை தௌிவுபடுத்த வேண்டும். அவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்க வேண்டும் என தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.
மற்றுமொரு கட்சியில் உறுப்புரிமையைப் பெற்றால், பாராளுமன்ற உறுப்பினர் பதவி இரத்தாகும் என 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் தௌிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இவ்வாறான கட்சி மாற்றங்களுக்கு காரணமான மஹிந்த ராஜபக்ஸ மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த மஹிந்த அமரவீர, அவ்வாறான எண்ணம் தமக்கு இல்லை என குறிப்பிட்டார்.
13 May, 2022 | 05:23 PM
19 Apr, 2022 | 06:24 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS