அம்பாறையில் கைதான 14 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

ஏப்ரல் 21 தாக்குதல்; அம்பாறையில் கைது செய்யப்பட்ட 14 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

by Staff Writer 04-09-2019 | 1:11 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய குழுவுக்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில், அம்பாறையில் கைது செய்யப்பட்ட 14 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் கல்முனை நீதவான் I.N. ரிஷ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் செப்டம்பர் 14ஆம் திகதி வரை சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். காத்தான்குடி, கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை மற்றும் சம்மாந்துறை ஆகிய பகுதிகளில் கைது செய்யப்பட்டவர்களின் விளக்கமறியலே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் அனைவரும் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த சந்தேகநபர்கள் தொடர்பில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.