புலமைப்பரிசில் நிதி அதிகரிப்பிற்கு அனுமதி

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் நிதி அதிகரிப்பிற்கு அமைச்சரவை அனுமதி

by Staff Writer 03-09-2019 | 6:39 PM
Colombo (News 1st) 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் நிதியை 50 வீதத்தினால் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கிணங்க, 500 ரூபா கொடுப்பனவு 750 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. புலமைப்பரிசிலை அதிகரிக்கும் யோசனை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. தற்போது வருடாந்தம் 1,30,000 மாணவர்கள் புலமைப்பரிசில் பெறுகின்றனர்.