வாடியில் இருந்து மீனவரின் சடலம் மீட்பு

வடமராட்சி கிழக்கில் வாடியொன்றிலிருந்து மீனவரின் சடலம் மீட்பு

by Staff Writer 03-09-2019 | 5:48 PM
Colombo (News 1st) வடமராட்சி கிழக்கு - ஆழியவளை கடற்கரை பகுதியிலுள்ள வாடியொன்றிலிருந்து ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஆழியவலை பகுதி மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. புத்தளம் - உடப்பு பகுதியிலிருந்து ஆழியவளை பகுதிக்கு சென்று, அங்கு தங்கியிருந்து மீன்பிடியில் ஈடுபட்டு வந்த மீனவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தன​ர். உடப்பு 6 ஆம் வட்டாரம் பகுதியை சேர்ந்த 44 வயதான மீனவரே சடலமாக மீட்கப்பட்ட நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலதிக விசாரணைகளுக்காக சடலம் குறித்த பகுதியிலேயே வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.