by Staff Writer 03-09-2019 | 8:38 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் இன்று விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் அணி ஆதரவாளர்களால் யாழ்ப்பாணம் - சுதுமலை அம்மன் ஆலயத்தில் இந்த பூஜை வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்த பூஜை வழிபாடுகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் அணி ஆதரவாளர்கள் மற்றும் சஜித் பிரேமதாசவின் யாழ். மாவட்ட இணைப்பாளர் எஸ்.ஆர்.எம்.விக்ரமசிங்க ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.