by Staff Writer 03-09-2019 | 9:17 AM
Colombo (News 1st) கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெயாங்கொட வரையான புதிய ரயில் மார்க்கம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனூடாக விமான நிலையத்திற்கு வருகைதரும் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்நாட்டுப் பயணிகள் கொழும்புக்கு செல்லாது வெயாங்கொட ஊடாக கண்டி, பதுளை, யாழ்ப்பாணம் திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கு செல்ல முடியும் எனவும் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.