இரத்மலானையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

இரத்மலானை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

by Staff Writer 03-09-2019 | 2:19 PM
Colombo (News 1st) இரத்மலானை - சில்வெஸ்டர்ஸ் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இருவருக்கு இடையில் நேற்று (02) இரவு இடம்பெற்ற வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதையடுத்து இந்தக் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் வெடிகந்த பகுதியைச் சேர்ந்த 34 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ரத்மலானை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.