தமிழ் இலங்கையர் பாரம்பரிய மற்றும் நவீன கலைகள் அரச விருது வழங்கல் விழா

by Staff Writer 03-09-2019 | 8:09 AM
Colombo (News 1st) தமிழ் இலங்கையர் பாரம்பரிய மற்றும் நவீன கலைகள் அரச விருது வழங்கல் விழா ​நேற்று (02) கொழும்பு தாமரைத் தடாகம் கலையரங்கில் நடைபெற்றது. அரச விருது விழாவில் நியூஸ்ஃபெஸ்ட்- சக்தி TV முகாமையாளர் இராஜேந்திரன் கோகுல்நாத், சக்தி FM அலைவரிசைப் பிரதானி ஆர்.பி. அபர்ணா சுதன், சக்தி FM நிகழ்ச்சிப்பிரிவு முகாமையாளர் ஞானகுமாரன் கணாதீபன், ஊடகவியலாளர் உமாசந்திரா பிரகாஷ் ஆகியோர் கலைச்சுடர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.