வடமராட்சி கிழக்கில் வாடியொன்றிலிருந்து மீனவரின் சடலம் மீட்பு

வடமராட்சி கிழக்கில் வாடியொன்றிலிருந்து மீனவரின் சடலம் மீட்பு

வடமராட்சி கிழக்கில் வாடியொன்றிலிருந்து மீனவரின் சடலம் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

03 Sep, 2019 | 5:48 pm

Colombo (News 1st) வடமராட்சி கிழக்கு – ஆழியவளை கடற்கரை பகுதியிலுள்ள வாடியொன்றிலிருந்து ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஆழியவலை பகுதி மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

புத்தளம் – உடப்பு பகுதியிலிருந்து ஆழியவளை பகுதிக்கு சென்று, அங்கு தங்கியிருந்து மீன்பிடியில் ஈடுபட்டு வந்த மீனவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தன​ர்.

உடப்பு 6 ஆம் வட்டாரம் பகுதியை சேர்ந்த 44 வயதான மீனவரே சடலமாக மீட்கப்பட்ட நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலதிக விசாரணைகளுக்காக சடலம் குறித்த பகுதியிலேயே வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்