ஒருதொகை கழிவுத் தேயிலையுடன் இருவர் கைது

நிட்டம்புவயில் ஒருதொகை கழிவுத் தேயிலையுடன் இருவர் கைது

by Staff Writer 01-09-2019 | 2:38 PM
Colombo (News 1st) கொழும்பு - நிட்டம்புவ பகுதியில் 6 840 கிலோகிராம் கழிவுத் தேயிலையுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 30 கிலோகிராம் வீதம் 216 பைகளில் பொதியிடப்பட்ட நிலையில் காணப்பட்ட கழிவுத்தேயிலை மற்றும் சந்கேநபர்கள் பயணித்த லொறியும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. 35 மற்றும் 38 வயதானவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களை இன்று (01) அத்தனகல்ல நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.