by Staff Writer 01-09-2019 | 2:28 PM
Colombo (News 1st) யால தேசிய பூங்கா இன்று (01) முதல் அடுத்த மாதம் 31 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வறட்சியுடனான வானிலை மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக பூங்கா மூடப்படவுள்ளதாக யால தேசிய பூங்காவின் தொடர்பாடல் அதிகாரி ஹசினி சரத்சந்திர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அடுத்த மாதம் 13 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை அனைத்து தேசிய பூங்காக்களும் மூடப்படவுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள யானைகளின் கணக்கெடுப்புக்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.