by Staff Writer 31-08-2019 | 3:28 PM
Colombo (News 1st) எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் நடத்த எதிர்பார்த்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியினால் எல்பிட்டிய பிரதேச சபையில் முன்வைக்கப்பட்ட பெயர்ப்பட்டியல் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக அக்கட்சியின் செயலாளர் தாக்கல் செய்த மனு தொடர்பான தீர்ப்பை அறிவித்த போதே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
பிரசன்ன ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.