இலங்கை - நியூசிலாந்து இடையிலான சர்வதேச இருபதுக்கு 20 தொடர் நாளை ஆரம்பம்

by Staff Writer 31-08-2019 | 6:50 PM
Colombo (News 1st) இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான சர்வதேச இருபதுக்கு 20 தொடர் நாளை (01) ஆரம்பமாகவுள்ளது. தொடரின் முதல் போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில் நாளை இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இரண்டு அணிகளும் இதுவரை 16 சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் மோதியுள்ளன. அவற்றில் நியூசிலாந்து 8 போட்டிகளிலும் இலங்கை 6 போட்டிகளிலும் வெற்றியீட்டியுள்ளன. ஒரு போட்டி சமநிலையுடன் முடிவடைந்துள்ளதோடு, மற்றைய போட்டி முடிவின்றி கைவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளைய போட்டியில் வெற்றியீட்ட முடியும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்குவதாக இலங்கை அணித் தலைவர் லசித் மாலிங்க குறிப்பிட்டார். நியூசிலாந்துடன் போட்டியிடுவதன் பிரகாரம், துடுப்பாட்ட வரிசையில் மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்தார்.