பிரதேசசெயலாளர் பிரிவுகளுக்கு ரூ.100 மில்லியன் நிதி

அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் 100 மில்லியன் ரூபா நிதியுதவி

by Staff Writer 31-08-2019 | 4:32 PM
Colombo (News 1st) கிராமிய பொருளாதாரத்தை வலுவூட்டும் நோக்கில் மேலும் 100 மில்லியன் ரூபா நிதி அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் வழங்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் செயற்றிறன் மிக்க துரித கிராமிய அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் இதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது. மேலும், அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் முதலாம் திகதி தொடக்கம் 8 மாத காலத்திற்கு 30 கோடி ரூபாவை வழங்கவுள்ளதாகவும் நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.