Ceylon Tea ஐ பிரசித்தப்படுத்தும் வேலைத்திட்டம்

Ceylon Tea நாமத்தைப் பிரசித்தப்படுத்தும் வேலைத்திட்டம் மொஸ்கோவில் ஆரம்பம்

by Staff Writer 29-08-2019 | 10:38 AM
Colombo (News 1st) Ceylon Tea என்னும் நாமத்தைப் பிரசித்தப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் முதற்கட்டமாக ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் இந்த வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் 25 ஆம் திகதி தொடக்கம் முன்னெடுக்கப்படும் என இலங்கை தேயிலைச்சபை தெரிவித்துள்ளது. 50 மில்லியன் அமெரிக்க டொலர் இதற்காக செலவிடப்படவுள்ளதாகவும் தேயிலைச்சபையின் தலைவர் லூசிர் விஜயவர்தன தெரிவித்துள்ளார். இந்த வருடத்தின் முதல் 7 மாத காலப்பகுதியில் நாட்டின் தேயிலை ஏற்றுமதி மூலமான வருமானம் 14,140 கோடி ரூபாவாக அதிகரித்துள்ளதாக தேயிலை விற்பனை முகவர் நிலையம் அறிவித்துள்ளது.