வத்தளையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

வத்தளையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

by Staff Writer 29-08-2019 | 12:10 PM
Colombo (News 1st) வத்தளை - பலகல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (28) இரவு இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போதே இந்தக் கொலைச் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வத்தளையைச் சேர்ந்த 44 வயதான நபர் ஒருவரே இதன்போது உயிரிழந்தவராவார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.