மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

மீனவர்களுக்கு கடற்றொழில் திணைக்களம் விடுத்துள்ள அறிவுறுத்தல்

by Staff Writer 28-08-2019 | 2:23 PM
Colombo (News 1st) எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு வடக்கு மற்றும் தென் கிழக்குக் கடற்பிராந்தியங்களில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறித்த கடற்பிராந்தியங்களில் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளவர்களும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் ஊடாக கல்முனை வரையான கடற்பிராந்தியங்கள் மற்றும் புத்தளம் முதல் மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 55 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஏனைய செய்திகள்