உயர்தரத்தின் விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்

உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்

by Staff Writer 28-08-2019 | 7:46 AM
Colombo (News 1st) கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் முதற்கட்ட விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று (28) ஆரம்பமாகவுள்ளன. 28 பாடங்களுக்கான விடைத்தாள்கள் இதன்போது திருத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித குறிப்பிட்டுள்ளார். இந்தத் தடவை உயர்தரப்பரீட்சையில், 3 37 704 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். நாட்டில், 2 678 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.