மழையுடனான வானிலை தொடர்ந்தும் நீடிக்கும் நிலை 

மழையுடனான வானிலை தொடர்ந்தும் நீடிக்கும் நிலை 

by Staff Writer 27-08-2019 | 11:13 AM
Colombo (News 1st) நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளை (28) முதல் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் வட மேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் என குறிப்பிட்டுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் 50 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரை மற்றும் புத்தளம் முதல் மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணடலை வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.