பிரதமரின் செயலாளருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

பிரதமரின் செயலாளருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

by Staff Writer 27-08-2019 | 8:42 AM
Colombo (News 1st) பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாக்க, கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். விவசாய அமைச்சிற்கான கட்டடத்தை குத்தகைக்குப் பெற்றுக் கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் மற்றும் அது தொடர்பிலான அனைத்து தகவல்கள் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக அவர் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். குறித்த விவசாய அமைச்சிற்கான கட்டடத்தை குத்தகைக்குப் பெற்றுக் கொள்வதற்கான அமைச்சரவை அனுமதிப் பத்திரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதன்படி, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாக்க இன்று (27) காலை 9 மணிக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.