பதுரலியவில் ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

பதுரலிய பகுதியில் ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

by Staff Writer 27-08-2019 | 9:45 AM
Colombo (News 1st) பதுரலிய பகுதியில் ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து, இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் 72 வயதான முதியவர் ஒருவரே உயிரிழந்துள்ளார். மேலும், பிரேத பரிசோதனைகள் மற்றும் நீதவான் விசாரணைகள் இன்று (27) இடம்பெறவுள்ளன. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.