ஐக்கிய தேசிய முன்னணி கட்சித் தலைவர்களுக்கு இடையில் கலந்துரையாடல்

by Staff Writer 27-08-2019 | 8:40 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று அலரி மாளிகையில் நடைபெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவும் கலந்து கொண்டிருந்தார். பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் இதில் பங்கேற்றதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர். சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு அடுத்து வரும் தினங்களில் கலந்துரையாடப்படும் என குறிப்பிட்டார். இன்றைய சந்திப்பில் கூட்டமைப்பின் இணக்கப்பாடு குறித்து கலந்துரையாடப்பட்டதாகக் கூறினார்.