பசறை பிரதேச சபை உறுப்பினர் மீது தாக்குதல்: சந்தேகநபருக்கு பிணை

by Staff Writer 27-08-2019 | 7:49 PM
Colombo (News 1st) மலையக மக்கள் முன்னணியின் பசறை பிரதேச சபை உறுப்பினர் கண்மணி சிவநேசன் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், 5 இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த பிரதேச சபை உறுப்பினர் பசறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மரம் வெட்டுவதற்கு இடையூறு செய்வதாகத் தெரிவித்து புலத் ராஜா என்ற நபர் தன்னைத் தாக்கியதாக பசறை பிரதேச சபை உறுப்பினர் கண்மணி சிவநேசன் குறிப்பிட்டார்.

ஏனைய செய்திகள்