பஹத்கம துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு

by Staff Writer 26-08-2019 | 2:25 PM
Colombo (News 1st) ஹங்வெல்ல - பஹத்கம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு 10 மணியளவில் முகத்தை மூடிய தலைக்கவசம் அணிந்து மோட்டார்சைக்கிளில் வந்த இருவர், வீட்டிலிருந்த இருவர் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிப் பிரயோகத்தில் பலத்த காயங்களுக்குள்ளான 43 வயதான வீட்டின் உரிமையாளர் மற்றும் 32 வயதான மற்றுமொருவரும் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.