சிறு மீன்பிடிப் படகு தொடர்பாக குறுஞ்செய்தி 

சிறு மீன்பிடிப் படகு தொடர்பாக குறுஞ்செய்தி 

by Staff Writer 26-08-2019 | 7:22 PM
Colombo (News 1st) சிறு மீன்பிடிப் படகு தொடர்பாக குறுஞ்செய்தி வழங்கும் விசேட வேலைத் திட்டம் ஒன்றை கடற்றொழில் அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனடிப்படையில், கடலுக்கு மீன்பிடிக்காகச் செல்லும் சிறிய மின்பிடிப் படகுகள் காலநிலை தொடர்பான தகவல்களை முன்கூட்டியே அறிந்துகொள்வதற்கு இந்தக் குறுஞ்செய்திகள் மிகவும் உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காற்று வீசும் திசை, கடல் கொந்தளிப்பாகவுள்ள தினங்கள், சீரற்ற காலநிலை, அடைமழை தொடர்பான தகவல்களை முன்கூட்டியே மீனவர்களுக்கு அனுப்பிவைக்க இந்தக் குறுஞ்செய்திச் சேவை பயன்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக கொழும்பு, காலி கரையோரப் பகுதிகளில் உள்ள மீன்பிடிப் படகுகளுக்கு இந்தச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்தச் சேவை நாட்டின் ஏனைய கரையோரப் பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.