களுகங்கை நீர்த்திட்டம்: நிலக்கடலை அறுவடை ஆரம்பம்

களுகங்கை நீர்த்திட்டத்தின் மூலமான நிலக்கடலை அறுவடை ஆரம்பம்

by Staff Writer 26-08-2019 | 2:49 PM
Colombo (News 1st) களுகங்கை நீர்த்தேக்கத் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட நிலக்கடலை அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மொரகஹகந்த நீர்த்திட்டத்துடன் நிர்மாணிக்கப்பட்ட களுகங்கை நீர்த்திட்டத்தின் முதலாவது நீர் விநியோகத்தின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பயிர், அறுவடை லக்கல பிரதேசத்தில் இடம்பெறுகின்றது. இதற்கு முன்னர் இந்தப் பிரதேசத்தில் வருடத்தில் ஒரு போகத்திற்கான உற்பத்தி நடவடிக்கைகள் மாத்திரம் மேற்கொள்ளப்பட்ட விவாசாய நிலங்களில் தற்போது 2 போகங்களுக்கான உற்பத்தி மேற்கொள்வதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.